மதுரை உயர்நீதிமன்ற கிளை: மீண்டும் பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பு, மதுரையில் வருகிற 24ம் தேதி உயர் நீதிமன்றக்கிளை திறக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர். ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந் நிலையில் வருகிற 24ம் தேதி மதுரை கிளை திறக்கப்படும் என்று சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார். இதற்குபிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியஅரசிடமிருந்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந் நிலையில் 24ம் தேதி மதுரை கிளை திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளது அதிருப்தியைத்தருகிறது. முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பு மதுரை கிளை திறக்கப்பட்டால் மீண்டும் சென்னைவழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+