மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம் சந்திப்பு
டெல்லி:
கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த யார், யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும்விவாதிக்கப்பட்டுடது.
முன்னதாக சிங்கை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
சிதம்பரத்துக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு தமிழககாங்கிரஸ் வட்டாரத்தில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
தனிக் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு பதவி தரக் கூடாது என்று தமிழக காங்கிரசில் குரல்கள்எழுந்துள்ளன.
ஆனால், நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல்கொள்கைள் முழு அளவில் அமலாக, அவருக்கு துணையாக நின்றவர் சிதம்பரம் தான்.
நிதித்துறை இணையமைச்சராக தன்னுடன் ப.சிதம்பரம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என்பதால் அவரைஅமைச்சரவையில் சேர்க்க சிங் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.