சென்னை விமான நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலைய ஊழியர்கள் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டதால் விமான நிலையம்ஸ்தம்பித்தது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ்கள், பெட்டிகள் போன்ற லக்கேஜ்களை விமானத்தில்ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கோரி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றிரவு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த வேலை நிறுத்தம் நடந்தது.இதனால் பயணிகளின் பெட்டிகள், சரக்குகள் விமானங்களில் ஏற்றுவதும், விமானங்களிலிருந்து இறக்குவதும் முழுவதுமாகபாதிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தால் விமானங்கள் புறப்பாட்டில் தாமதம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications