காஷ்மீரில் தீவிரவாதிகளின் கண்ணி வெடிக்கு 28 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளின் கண்ணி வெடியில் சிக்கி 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர். அவர்கள் சென்ற பஸ் தூள்தூளானது.
மத்தியில் புதிய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியுள்ளமுதல் தாக்குதல் இது.
இன்று காலை ஜம்மூவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்து கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பஸ்,ஜவஹர் டனல் என்ற இடத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கியது.
இதில் அந்த பஸ் உடைந்த சிதறி, தீப்பற்றிக் கொண்டது. சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 28 வீரர்கள் பலியாயினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications