மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட மதுரை உயர் நீதிமன்ற கிளை திறப்பு
மதுரை :
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறப்பு விழா மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. மத்தியில் ஏற்பட்டுள்ளஅரசியல் மாற்றங்களால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரூ. 35 கோடி செலவில் உயர்நீதிமன்றக் கிளை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரை வந்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, 24ம் தேதி நிச்சயம் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்படும்.
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றார்.
தலைமை நீதிபதியே உறுதியாக கூறியதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். ஆனால், திறப்பு விழா நடக்கவில்லை.
மத்தியில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால், புதிய சட்ட அமைச்சரையும் கலந்து பேசிய பின்னரே திறப்பு விழாநடக்கும் என்று தெரிகிறது. சட்டத்துறை இணையமைச்சர் பதவி திமுகவைச் சேர்ந்த வேங்கடபதிக்குஒதுக்கப்பட்டுள்ளது.
இலாகா விவகாரங்கள் காரணமாக திமுக அமைச்சர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. பிரச்சனை தீர்ந்து திமுகஅமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் வேங்கடபதியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் திறப்பு விழாவைஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
ஒருவேளை வேங்கடபதி அமைச்சராகி திறப்பு விழாவில் பங்கேற்றால் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பாரா என்பதுசந்தேகமே.
கலாமுக்கு வழக்கறிஞர்கள் தந்தி:
இந் நிலையில், உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியவழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்குதந்திகள் அனுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சாமித்துரை கூறுகையில், பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளஉயர்நீதிமன்றக் கிளை, தலைமை நீதிபதி 2 முறை தேதி குறிப்பிட்டும் கூட, திறக்கப்படவில்லை,
இது தென் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளதுஎன்றார்.
இந்த நீதிமன்றத்தைத் திறக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் முட்டுக் கட்டை போட்டு வந்ததால் பலஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது இந்தத் திட்டம். கடைசியில் கட்டடமே கட்டி முடிக்கப்பட்டபின்னரும் கூட பிற விவகாரங்களால் திறப்பு விழா தள்ளிப் போய்க கொண்டுள்ளது.