கேட்டது என்ன? கிடைத்தது என்ன?
சென்னை:
காங்கிரஸ் கட்சியிடம் திமுக கேட்ட இலாகாக்கள் என்ன்ென என்ற விவரத்தை அக் கட்சியின் தலைவர் கருணாநிதிவிளக்கியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டிக்கும், எனக்கும் இடையே ஏற்பட்டஒப்பந்தத்தின் இறுதியில், ஜனார்தன ரெட்டி கையெழுத்துப் போட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரம்,
திமுகவுக்கு 3 கேபினட் இலாகாக்கள் ஒதுக்கப்படும். 1. தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல்போக்குவரத்து; 2. சுற்றுச்சூழல் மற்றும் வனம்; 3. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
(ஆனால், இதில் கப்பல் போக்குவரத்து பாலுவுக்குக் கிடைக்கவில்லை)
இணை அமைச்சர்களுக்கான இலாகாக்கள்:
1. நிதித்துறை (வருவாய்); 2. சட்டம் மற்றும் நீதி; 3. உள்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பெர்சனல்); 4.சமூகநீதி மற்றும் அமலாக்கம்
(இதில் உள்நாட்டுப் பாதுகாப்பு ரகுபதிக்குத் தரப்படவில்லை. பழனி மாணிக்கத்துக்கு நிதித்துறை தரப்படவில்லை,பதிலாக, வர்த்தகத்துறை தான் தரப்பட்டுள்ளது)
இதை கடிதத்தில் எழுதி கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார் ஜனார்தன ரெட்டி. ஆனால் முற்றிலும் வேறு விதமாகஎங்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் கருணாநிதி.
இந்தப் பிரச்சனையில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கைவரிசையும் இருக்கும் என கருணாநிதி கருதுகிறார். தனதுதுறையில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் இணையமைச்சராக இருப்பதை அவர் விரும்பவில்லை என்பதால், அவர்தான் பழனி மாணிக்கத்துக்கு நிதித்துறைக்குப் பதிலாக வர்த்தகத் துறையை ஒதுக்க வைத்ததாக திமுக கருதுகிறது.
திமுகவின் இந்த சந்தேகத்தால் அதிர்ந்து போன ப.சிதம்பரம் இன்று தயாநிதி மாறனுடன் சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து, திமுகவுக்கு நிதித்துறை கிடைக்க பரிந்துரைந்தது குறிப்பிடத்தக்கது.