For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீராணம் குழாய் உடைந்து வீணான குடிநீர்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீராணம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால்,வீராணத்திலிருந்து சென்னைக்குப் போக வேண்டிய நீர் வெள்ளம் போல சாலையில் ஓடி வீணாணது.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம்செய்வதற்கான புதிய வீராணம் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பணிகள்கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன.

நேற்று சோதனை ரீதியாக குழாய்கள் மூலம் வீராணத்திலிருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. அப்போது,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தரையில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிலிருந்து பல லட்சம் கேலன் தண்ணீர் வெள்ளம் போல வெளியேறியது.

அருகில் இருந்த வீடுகளுக்குள்ளும் இந்தத் தண்ணீர் புகுந்தது. சென்னைக்கு இரண்டு நாளைக்கு சப்ளைசெய்யப்படக் கூடிய அளவுக்கு தண்ணீர் வெளியேறியிருக்கலாம் என்று அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

உடைப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தரமற்ற குழாய்கள்பயன்படுத்தப்பட்டது தான் உடைப்புக்குக் காரணம் என அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X