மானத்தை கப்பலேற்றிவிட்டது திமுக: இல.கணேசன்
சென்னை:
அமைச்சர் பதவியே தேவையில்லை என்று கூறி வந்த திமுக இப்போது குறிப்பிட்ட இலாகாக்களை கேட்டுபிடிவாதம் செய்ததன் மூலம் அதன் பதவி ஆசை வெட்ட வெளிச்சமாகிவிட்டதாக அகில இந்திய பாஜக செயலாளர்இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 12 அமைச்சர்கள்கிடைத்துள்ளனர். இது பெரிய விஷயம்தான். கிடைத்த இடங்களை வைத்து பல நன்மைகளை செய்ய தமிழகஅமைச்சர்கள் முன்வர வேண்டும்.
ஆனால் ஆரம்பமே அபசகுனம் போல திமுகவின் செயல்பாடுகள் உள்ளன. நாட்டு நலன் கருதித்தான்ஒவ்வொருவருக்கும் இலாகா ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படுகிற இலாகாக்களை வைத்துக் கொண்டுநாட்டுக்கு என்ன செய்யலாம், மக்களுக்கு எந்த வகையில் சேவை புரியலாம் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதை விடுத்து இந்த இலாகாதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கேட்டு வாங்குவது நல்லதல்ல. மேலும்,ஒருவருக்கு என்ன இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்துபிரதமர் அல்லாத ஒருவர் இலாகாக்கள் தொடர்பாக உறுதிமொழிக் கடிதம் அளித்தது மரபு மீறிய செயலாகும்.
கப்பல்துறை வேண்டும் கேட்டு கூட்டணி அரசின் மானத்தையே கப்பலேற்றி விட்டார் கருணாநிதி.
நம்ப முடியாத கம்யூனிஸ்டுகளை நம்பி காங்கிஸ் ஆட்சி அமைத்துள்ளது. நம்ப முடியாத காங்கிரஸை நம்பி திமுகஆட்சியில் பங்கேற்றுள்ளது. நம்ப முடியாத திமுகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தக் கூட்டணிஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதே இப்போது சந்தேகமாகி விட்டது.
முஸ்லீம் லீக் கட்சிக்கு இதுவரை வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டதில்லை. அவர்களை நம்பி வெளியுறவுத்துறையை ஒதுக்கியிருப்பது நாட்டுக்கு ஆபத்தானது. முஸ்லீம்கள் இப்பதவிக்கு வருவதில் தவறில்லை, ஆனால்முஸ்லீம் லீக் கட்சியை நம்ப கூடாது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications