For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மீதான வருமான வரி வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்: பழனிமாணிக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா மீதான அனைத்து வருமான வரி மோசடி வழக்குகளும் மீண்டும்விசாரிக்கப்படும் என நிதித்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்ற பழனி மாணிக்கம் கூறினார்.

திமுகவைச் சேர்ந்த பழனி மாணிக்கம் தஞ்சையிலிருந்து எம்.பியாகி அமைச்சராகியுள்ளார்.

இன்று தனது பொறுப்பை ஏற்க வந்த மாணிக்கத்தை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்து வந்துஇருக்கையில் அமர வைத்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், எனக்கும்மாணிக்கத்துக்கும் இடையே ஏதோ பகை இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு இணையமைச்சராக மாணிக்கம் இருப்பது எனதுசுமையைப் பெருமளவு குறைக்கும் என்றார்.

பழனி மாணிக்கம் நிருபர்களிடம் கூறுகையில், வரிகளை உரிய முறையில் வசூலித்து, அரசின்வருவாயைப் பெருக்க முயற்சி எடுப்பேன் என்றார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவீர்களாஎன்று நிருபர்கள் கேட்டபோது,

நிச்சயமாக. அதில் சந்தேகமே வேண்டாம். அவர் மீதான எல்லா மோசடி வழக்குகளும் மீண்டும்விசாரிக்கப்படும் என்றார் மாணிக்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X