பாலு, தயாநிதி உள்பட திமுக அமைச்சர்கள் 7 பேரும் பொறுப்பேற்பு
சென்னை:
கேட்ட இலாகாக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒதுக்கிக்கொடுத்ததையடுத்து தி-மு-க -மத்-தி-ய அமைச்சர்-களான டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் இன்று தங்க-ள-துபொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
பிற திமுக அமைச்சர்களும் இன்று பொ-றுப்-புக்க-ளை ஏற்கவுள்ளனர்.
டி.ஆர். பாலு நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை இணைந்த தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
அதே போல தயாநிதி மாறன், தொலைத் தொடப்பு மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி துறை அமைச்சராகப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆர். ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராகவும், பழனி மாணிக்கம் நிதித்துறைஇணையமைச்சராகவும், எஸ்.ரகுபதி உள்துறை இணையமைச்சராகவும், வேங்கடபதி சட்டத்துறைஇணையமைச்சராகவும், சுப்பலட்சுமி ஜெகதீசன் சமூக நீதித்துறை இணையமைச்சராகவும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.