போலி முத்திரைத் தாள் மோசடி: சிபிஐயிடம் சிக்கிய எல்.ஐ.சி. அதிகாரி
மதுரை:
போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக மதுரை எல்.ஐ.சி. கோட்ட பயிற்சி மைய அதிகாரியான ஷாகுல்சிபிஐயிடம் பிடிபட்டார். விசாரணைக்காக அவரை சிபிஐ அதிகாரிகள் டெல்லி கொண்டு சென்றுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி முத்திரைத் தாள் மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்தசிலருக்கும் பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியானது. உயர் போலீஸ் அதிகாரி முகம்மது அலி உள்ளிட்ட சிலரதுபெயர்களும் இதில் அடிபட்டன.
இந் நிலையில் மதுரை செல்லூரில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.ஜி) கோட்ட பயிற்சி மையத்தின்அதிகாரியான ஷாகுல் என்பவர் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
இவருக்கும், தமிழக காவல்துறை அதிகாரி அலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ஷாகுலுக்கு போலிமுத்திரைத் தாள் மோசடியில் பங்கு இருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் கருதுகின்றனர்.
திருநகல் உள்ள ஷாகுலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மேல்விசாரணைக்காக ஷாகுலை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக இன்று பெங்களூரில் பல இடங்களிலும் சிபிஐ ரெய்ட்நடத்தியது. இந்த மோசடியின் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு கைதான தெல்கி பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications