For Daily Alerts
Just In
எஸ்.எஸ்.சந்திரன் ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.எ.சந்திரன் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தொண்டர்களை தாக்கமுயன்றதாகவும், அதிமுகவினரை தாக்குதலுக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவானது.
தேர்தல் கமிஷனின் கெடுபிடி காரணமாக சந்திரன் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் சந்திரன். ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்அவர் வேலூரில் தங்கியிருந்து தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
இதைத் தளர்த்தக் கோரி எஸ்.எஸ்.சந்திரன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்தநீதிபதி தணிகாச்சலம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார். இதனால் அவர் சென்னை திரும்ப முடியும்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, May 27, 2004, 5:30 [IST]