சுய மரியாதை திருமணங்கள்: கருணாநிதி பெருமிதம்
சென்னை:
பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்ணாவால் கட்டிக் காக்கப்பட்ட சுய மரியாதைத் திருமணங்கள் இன்றுபெருகி வருவது பெருமிதம் தருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பிரமுகர் கு.க.செல்வம் இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர்அரங்கில் நடந்தது. சுய மரியாதை முறைப்படி நடந்த திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்ணாவால் தமிழகமெங்கும் பரப்பப்பட்டசுய மரியாதைத் திருமணங்கள் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக நடந்து வருவது பெருமிதம் தருகிறது.
தமிழர்களின் கலாசாரத்தைக் காக்கும் வகையில் சுய மரியாதைத் திருமணங்கள் விளங்குகின்றன. முன்பெல்லாம்,சுய மரியாதைத் திருமணங்கள் செய்தால் சந்தோஷமாக வாழ முடியுமா, குழந்தைகள் பிறக்குமா என்றெல்லாம்சந்தேகப்பட்டார்கள். ஆனால் அந்தக் கவலை, சந்தேகம் இன்று காணாமல் போய் விட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications