மதுரை கலெக்டரை முற்றுகையிட வருவாய் துறை ஊழியர்கள் முடிவு
மதுரை:
மதுரை மாவட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் சங்க வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்அடங்கிய பெட்டிகளை இருப்பு வைக்க உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரைக் கண்டித்து அவரைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்த வருவாய்த் துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் ஆட்சித் தலைவர்அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளை, வருவாய் ஊழியர்கள் சங்கவளாகத்தில் இருப்பு வைக்குமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது வருவாய் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது சங்க நிர்வாகிகளை கேட்காமல் ஆட்சித்தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆட்சித் தலைவர் தனது முடிவைமாற்றிக் கொள்ளாவிட்டால் அவரைக் கண்டித்து முற்றுகையிட்டு கெரோ செய்யப் போவதாக அவர்கள்அறிவித்துள்ளனர்.
வருவாய் ஊழியர்களின் இந்த எச்சரிக்கையால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications