தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, சென்னைக்கு புதிய குடிநீர் திட்டம்: மத்திய அரசு உறுதிமொழி
டெல்லி:
திமுக, பாமக மதிமுக ஆகிய கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துவழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இந்த உறுதிமொழி தரப்பட்டுள்ளது.அதே போல சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும், சென்னையின் குடிநீர்பிரச்சனையைப் போக்க கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமலாக்கவும்உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிக்கும் என்றும்கூறப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டத்தை உருவாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கட்சிகளுக்கும் முக்கிய பங்குண்டுஎன்பது குறிப்பிடத்தக்கது.
செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் மூத்தமொழிகளில் ஒன்றான தமிழுக்கு செம்மொழி (கிளாசிகல் லாங்வேஜ்) அந்தஸ்துவழங்கப்படும். இது தவிர அனைத்து இந்திய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாகஅறிவிப்பது குறித்து ஆராய குழு அமைக்கப்படும்.
(இதன்மூலம் தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும். தேசிய அளவில்பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவிக்க பிரிவுகள் ஏற்படுத்தப்படும்)
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும்.
(இதனால் வங்கக் கடலில் இருந்தும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தும், அரபிக்கடலுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டிருக்காமல் பாக் ஜலசந்தி வழியாகசெல்ல முடியும்.
இதனால் தூத்துக்குடி துறைமுகம் மாபெரும் வளர்ச்சி அடையும். கப்பல்கள் மூலமான வரி பெருகும்,கப்பல்கள் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும், தமிழகம் வழியான ஏற்றுமதி, இறக்குமதியும்அதிகரித்து, அதைச் சார்ந்த தொழில்களும் வளரும்)
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அந் நாட்டின் ஒற்றுமை மற்றும்இறையாண்மை பாதிக்கப்படாத வகையிலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்கும் என்றும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவின் நெருக்குதலால் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரிப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications