மதமாற்ற தடை சட்டத்தை தொடர கோரி 14ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டை:
மதமாற்ற தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு மதமாற்ற தடைசட்டத்தை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எதிர்த்தும், மதமாற்ற தடைசட்டத்தை நீட்டிக்கக் கோரியும் இந்து முன்னணியின் சார்பில் வருகிற 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டதலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதிமுக தனது ஓட்டு வங்கியை இழக்கவில்லை. எனவே பதட்டப்படத் தேவையில்லை. வெற்றி, தோல்வி என்பதுதேர்தலில் சகஜம்தான். அதற்காக தேர்தலுக்கு தேர்தல் தனது கொள்கையை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால்மக்களிடையே நம்பிக்கை போய்விடும்.
பொடா சட்டத்தை ரத்து செய்ய கூடாது. மேலும் அதை கடுமையாக்க வேண்டும்.
இந்து விரோத திமுக கூட்டணிக்கு இந்து முன்னணி எப்போதும் ஆதரவளிக்காது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications