தமிழகம் முழுவதும் நல்ல மழை
சென்னை:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் 80 மி.மீ. மழையும், மதுரையில் 70 மி.மீ. மழையும், கும்பகோணம், பவானி, திண்டுக்கல்,திருச்செங்கோடு, வால்பாறை ஆகிய இடங்களில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் நாமக்கல், கரூர், சேலம், திருப்புவனம், திருவாரூர், ஒசூர், கொடைக்கானல், மேட்டுப்பாளையும், திருப்பூர்,ஊட்டி, அறந்தாங்கி, மேலூர், சிவகங்கை, குடவாசல் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள் பகுதிகளில், குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கோவை,ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications