ராஜிவ் கொலை விசாரணை கமிஷனின் காலம் நீட்டிப்பு
டெல்லி:
ராஜிவ் கொலையில் அன்னிய சதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டபல்நோக்கு விசாரணைக் குழுவின் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் அறிக்கையின்அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
ராஜிவ் கொலையில் அன்னிய நாட்டு சதி, விடுதலைப் புலிகள் மற்றும் பிற அமைப்புகள், நாடுகள்,தனிப்பட்ட நபர்களின் பங்கு, கொலைக்காக பேங்க் ஆப் கிரெடிட் அண்ட் காமர்ஸ் இன்டர்நேசனல்வங்கியில் நடந்த நிதி பரிவர்த்தனைகள், ஆயுத பரிவர்த்தனைகள் ஆகியவை குறித்து விசாரிக்கஇந்தக் குழு அமைக்கப்பட்டது.
கொலையில் ஒற்றைக்கண் சிவராசன், சந்திராசாமி ஆகியோரின் பின்னணி குறித்து விசாரிக்க இக்குழுவுக்கு ஜெயின் கமிஷன் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக இக் குழுவின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்இல்லை. இந் நிலையில் இதன் கால வரம்பு முடிவுக்கு வந்ததால், அதன் விசாரணைக் காலத்தைமேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்தது. இந்தக் குழுவில் சிபிஐ, ஐபி, ராமற்றும் கேபினட் செயலாளர் அலுவலக அதிகாரிகள், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவுஅதிகாரிகள் அடக்கம்.












Click it and Unblock the Notifications