இலங்கை பிரச்சினை: இந்தியா தலையிட வைகோ கோரிக்கை
திருநெல்வேலி:
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில்இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்கும் தேவை. பேச்சுவார்த்தையில் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்.இலங்கைப் பிரச்சினையில் அமைதித் தீர்வு ஏற்பட இந்தியாவும் முயற்சிக்க வேண்டும்.
இலங்கையில் அமைதி நிலவுவது இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கும்நமக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் மத்திய அரசை வற்புறுத்தவில்லை. அதேசமயம்,விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்என்றுதான் நான் கூறியுள்ளேன்.
நடந்ததை மறந்து நடக்கப் போவதை நினைத்து செயல்படுவோம். இதைத்தான் என்னிடம் பேசிய மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கிடம் நான் கூறினேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications