காவிமயமான பாடத்திட்டங்கள் மாற்றம்: அர்ஜூன் சிங் அறிவிப்பு
டெல்லி:
காவிமயமாக மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது பாடத்திட்டங்களில் பெரிய அளவில்மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் கல்வி காவிமயமானது.
பாடத்திட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டதற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய கல்வி ஆலோசனைவாரியத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் அவர்களுடைய ஆட்சேபணைகள் கேட்கப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக அந்த வாரியத்தின் கூட்டமும் கூட்டப்படவில்லை. அந்த வாரியத்துக்கு மீண்டும் புத்துயிர்அளிக்கப்படும். எந்த வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன என்பது குறித்து தற்போது கவனமாகஆராய்ந்து வருகிறோம். இதன் முடிவில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களில் இந்து மதப்பாடல்கள் பாட வற்புறுத்தப்படுவது குறித்து ஆராய்ந்துநடவடிக்கை எடுக்கப்படும் என்று அர்ஜுன் சிங் கூறினார்.