மதுரையை கலக்கும் தக்காளி!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் மதுரை மக்கள் கதி கலங்கிப்போயுள்ளனர்.
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிப்போய்க் கிடக்கிறது. குறிப்பாக தக்காளி விலை படு பயங்கரமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்படுகிறது. அதேபோல, கிலோ காரட் ரூ.18க்கும், பீன்ஸ் ரூ.40க்கும்விற்கப்படுகிறது. இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி உள்பட ஒரு காயையும் வாங்கிச் சாப்பிட முடியாத நிலை நிலவுகிறது. சந்தைக்குப் போதிய காய்கறிகள்,தக்காளி ஆகியவை வராத காரணத்தினாலேயே விலை உயர்வு கடுமையாக இருப்பதாக வியாபாரிகள்கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications