மருத்துவமனை நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், கோவில்களில் செருப்பு கட்டணம் ரத்து
சென்னை:
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை நிறுத்த வசூலிக்கப்படும் கட்டணத்தையும், அரசு மருத்துவமனைகளில்வசூலிக்கப்பட்டு வந்த நுழைவுக் கட்டணத்தையும் முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளளார்.
அதேபோல் கோவில்களில் செருப்புகளைப் பராமரிக்க வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தையும் ஜெயலலிதா ரத்துசெய்துள்ளார்.
நேற்று முன்தினம் மின்சாரக் கட்டண குறைப்பு, நேற்று விவசாயிகளுக்குப் பலன் கொடுக்கும் பால் கொள்முதல்விலை உயர்வு என சலுகை அறிவிப்புகளை வெளியிட்ட ஜெயலலிதா இன்று மேலும் சில சலுகைகளைஅறிவித்துள்ளார்.
இதன்படி மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர், மூன்று சக்கர வாகனங்களைநிறுத்த மக்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல் அரசு மருத்துவமனைகளில்வசூலிக்கப்பட்டு வந்த நுழைவுக் கட்டணமான ரூ.5 இனி செலுத்த வேண்டியதில்லை.
இதேபோல, கோவில்களில் செருப்புகளைப் பராமரிக்கும் இடங்களில் பக்தர்களிடம் தற்போது கட்டணம்வசூலிக்கப்பட்டு
வருகிறது. ஜூலை மாதம் முதல் இந்தக் கட்டண முறையும் ரத்து செய்யப்படுகிறது என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஜெவின் அதிரடி அறிவிப்புகள்:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் இதுவரை ஜெயலலிதா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் விவரம்:












Click it and Unblock the Notifications