கருணாநிதியின் முத்து விழா கொண்டாட்டங்கள் தொடங்கியது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி திமுகவின் பல்வேறு அணிகள் சார்பாக நடத்தப்படும்கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை தொடங்கின.
கருணாநிதிக்கு நாளை 81 வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்அரங்கத்தில் கருணாநிதியின் முத்து விழா கொண்டாட்டம் இன்று காலை தொடங்கியது. நாதஸ்வர இசையுடன்தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம்தொடங்கியது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குணம் கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் பின்னர்,இளைஞர் அணியினரின் வழக்காடு மன்றம், இலக்கிய அணியினரின் பட்டிமன்றம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிஆகியவை நடைபெறவுள்ளன.
இரவில் கவியரங்கம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை கருணாநிதிக்கு தலைவர்கள்,தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.
நாளை மாலை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications