For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட ஓட விரட்டி மகளை படுகொலை செய்த தந்தை

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் காதலைக் கைவிட மறுத்த மகளை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார் கொலைகாரதந்தை.

தஞ்சாவூர், மானோஜிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா. 17 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தகார்த்திக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்தக் காதலை இலக்கியாவின் தந்தை ராஜந்திரன் ஏற்கவில்லை. கார்த்திக்கை மறந்து விட்டு உருப்படுகிறவழியைப் பார் என்று இலக்கியாவை கண்டித்துள்ளார் ராஜேந்திரன். ஆனால் தந்தையின் அறிவுரையைக்கண்டுகொள்ளவில்லை இலக்கியா.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இலக்கியாவை வெட்டமுயன்றுள்ளார். அவர் தப்பித்து வீட்டை விட்டு வெளியே வந்தார். ஆனால் விடாமல் துரத்திய ராஜேந்திரன்,இலக்கியாவை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X