செக் மோசடி: நீதிமன்றத்தில் பூர்ணிமா பாக்யராஜ் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செக் மோசடி வழக்கில் எழும்பூர் 14வது பெருநகர நீதிமன்றத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆஜராகினார்.
வடபழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 2002ம் ஆண்டு பூர்ணிமா பாக்யராஜ் ரூ. 3 லட்சம் கடன்வாங்கியிருந்தார். அதில் ரூ.95,000 முதலில் திருப்பித் தந்தார்.
மீதிப் பணம் ரூ.2.05 லட்சத்திற்கு காசோலைவழங்கினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டது.
அப்போது கடன்தொகையை 3 வாரத்தில் கட்டுவதாக பூர்ணிமா ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜ் வழக்கு விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications