பிரதாப் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவி ரோஸ்லின் செல்வஅரசியின் கணவர் பிரதாப் கொலை வழக்கு சேலையூர் காவல்நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரோஸ்லின் செல்வஅரசியின் காதல் கணவர் பிரதாப்பை ஆள் வைத்து கொன்று விட்டதாகரோஸ்லினின் தந்தை ராதாகிருஷ்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை சேலையூர்போலீஸாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி பிரதாப்பின் சகோதரர் அமிதாப் சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி குலசேகரன் மற்றும் நீதிபதி மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது,அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் எழுந்து, இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டது என்றுதெரிவித்து இதுதொடர்பான அரசு உத்தரவையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications