வக்பு வாரிய தலைவராக பதர் சயீத் மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பதர் சயீத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
வக்பு வாரிய தலைவராக இருந்த பதர் சயீத் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி ஆவார். சமீபத்தில் நடந்தமக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
தேர்தலுக்கு முன் அவர் வக்பு வாரியத் தலைவராக பதவி வகித்து வந்தார். தேர்தலில் போட்டியிட்டதால் அதைராஜினாமா செய்து விட்டார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அவர் வக்பு வாரிய உறுப்பினராகதமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் வாரிய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது வாரியத் தலைவராக பதர்சயீத் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications