For Daily Alerts
Just In
வேலூர் மத்திய சிறையில் துப்பாக்கி வெடித்து காவலர் சாவு
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் தவறுதலாக துப்பாக்கி சுட்டதில் காவலர் ஒருவர் பலியானார்.
வேலூர் மத்திய சிறையில் காவலர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். காலை 7 மணிக்கு நடராஜன்என்பவரது பணி முடிந்தது. அவரைத் தொடர்ந்து அய்யப்பன் என்பவர் பணியை ஏற்றார்.
பணியை ஏற்றுக் கொண்ட அய்யப்பன் தனது துப்பாக்கியை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாகதுப்பாக்கி விசையில் கை படவே அது சுட்டது. இதில் அந்த அறையில் இருந்த நடராஜன் மீது குண்டு பாய்ந்து அவர்படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாகஇறந்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, June 2, 2004, 5:30 [IST]