அமைதி பேச்சுவார்த்தையில் மோதல், ஒருவர் கொலை: கமுதியில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்மோதல் ஏற்பட்டு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் கமுதி சுற்றுவட்டாரத்தில் பரபரப்புநிலவுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது ஒத்தப்புலி கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகே உள்ளதுநல்லான்குளம் கிராமம், இது விருதுநகர் மாவட்டம் பரளச்சி காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது.

இரு கிராம மக்களும் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மோதிக் கொள்வது வழக்கம். இந் நிலையில்ஒத்தப்புலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நல்லான்குளம் செல்லும் பேருந்தில் பயணித்தார். குடிபோதையில் இருந்தஅவர், நல்லான்குளத்தைச் சேர்ந்த இருவரிடம் தகராறு செய்துள்ளார்.

இது பெரிய மோதலாகி இரு கிராமத்தினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்துநல்லான்குளம் கிராமத்து பஞ்சாயத்தைக் கூட்டி இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்படுத்த முடிவாகியது.

ஒத்தப்புலியைச் சேர்ந்த சிலர் நல்லான்குளம் பஞ்சாயத்திற்கு வந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது,திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது. இதில் நல்லான்குளத்தைச் சேர்ந்த ராமு என்பவர்வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இதையடுத்து நல்லான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஒத்தப்புலி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள குடிசைகளுக்குத்தீவைத்தனர்.

தகவல் அறிந்துதம் டிஐஜி அலெக்சாண்டர் மோகன் தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்தது. இருகிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+