தமிழில் உறுதிமொழி எடுத்து கொண்ட தமிழக எம்.பிக்கள்
டெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவை உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோதுதமிழ் மொழியில் உறுதிமொழியை வாசித்தனர்.
முதலில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரையடுத்து அமைச்சர்கள்மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஏ.ராஜா ஆகியோரும் தமிழில் உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் இணை அமைச்சர்கள் ஆர். வேலு, பழனி மாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி,இளங்கோவன் ஆகியோரும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மற்ற உறுப்பினர்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக உறுப்பினர்களில்பெரும்பாலானவர்கள் வேட்டி, சட்டையுடன் வந்திருந்தனர்.
தமிழக எம்.பிக்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவர்களது மாநில மொழியிலேயே உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications