For Quick Alerts
For Daily Alerts
Just In
வாக்காளர் பட்டியல் முறைகேடு: 7ம் தேதி முதல் விசாரணை
நாகர்கோவில்:
தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கேரள மாநில தேர்தல் ஆணையர் வரும் 7ம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் இந்த மாதம் 21ம் தேதி வரை தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு தனித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்களது பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டது தொடர்பாக கேரள தேர்தல் ஆணையர் விசாரணை நடத்தவுள்ளார். இதற்காக அவர் 7ம் தேதி சென்னை வருகிறார் என்றார் சாரங்கி.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, June 4, 2004, 5:30 [IST]