காவிரி நீர்: மன்மோகனுக்கு கருணாநிதி வேண்டுகோள்சென்னை:முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தமிழக காவிரி விவசாயிகளைக் காப்பாற்றியது போல, இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி சென்னை தீவுத் திடலில் பிறந்த நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.தலைவர்களின் பாராட்டுக்குப் பிறகு கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தினார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக அவர் விரிவாகப் பேசினார். கருணாநிதி பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நிலை மோசமாகி வருகிறது. இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாக தலையிட வேண்டும்.காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயத்தில், கர்நாடக விவசாயிகளின் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டு தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. இரு தரப்பு விவசாயிகளுக்கும் பலன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுதான் அப்போது தமிழக காவிரி விவசாயிகளைக் காத்தது. நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்பட்டிருக்காவிட்டால், இந்நேரம் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாகி இருக்கும். விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் சிக்கியிருப்பார்கள்.வி.பி.சிங் போல மன்மோகன் சிங்கும் உடனடியாக செயல்பட்டு காவிரி விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாஜ்பாய் பிரதரமாக இருந்தபோதும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். ஆனால் திமுகவுக்குப் பிறகு வந்த தமிழக ஆட்சியாளர்கள் வாஜ்பாய்க்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.திமுகவின் வற்புறுத்தலின்பேரில் காவிரி நீர் ஆணையத்தை வாஜ்பாய் அமைத்தார். இந்த ஆணையத்தை அதிகாரம் இல்லாதது, பல் இல்லா பாம்பு என அதிமுக தலைமை விமர்சனம் செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வாஜ்பாய்க்கு ஒத்துழைக்கவில்லை என்றார் கருணாநிதி.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தமிழக காவிரி விவசாயிகளைக் காப்பாற்றியது போல, இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி சென்னை தீவுத் திடலில் பிறந்த நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர்களின் பாராட்டுக்குப் பிறகு கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தினார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக அவர் விரிவாகப் பேசினார். கருணாநிதி பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நிலை மோசமாகி வருகிறது. இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாக தலையிட வேண்டும்.

காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயத்தில், கர்நாடக விவசாயிகளின் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டு தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. இரு தரப்பு விவசாயிகளுக்கும் பலன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுதான் அப்போது தமிழக காவிரி விவசாயிகளைக் காத்தது. நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்பட்டிருக்காவிட்டால், இந்நேரம் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாகி இருக்கும். விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் சிக்கியிருப்பார்கள்.

வி.பி.சிங் போல மன்மோகன் சிங்கும் உடனடியாக செயல்பட்டு காவிரி விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாஜ்பாய் பிரதரமாக இருந்தபோதும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். ஆனால் திமுகவுக்குப் பிறகு வந்த தமிழக ஆட்சியாளர்கள் வாஜ்பாய்க்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

திமுகவின் வற்புறுத்தலின்பேரில் காவிரி நீர் ஆணையத்தை வாஜ்பாய் அமைத்தார். இந்த ஆணையத்தை அதிகாரம் இல்லாதது, பல் இல்லா பாம்பு என அதிமுக தலைமை விமர்சனம் செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வாஜ்பாய்க்கு ஒத்துழைக்கவில்லை என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+