For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ, எம்.பி.பி.எஸ்: மறு நுழைவு தேர்வு கிடையாது- உயர் நீதிமன்றம்சென்னை:தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 22 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. இந் நிலையில் இக்கேள்விகளை ரத்து செய்து விட்டு, அவற்றிற்கான மதிப்பெண்களை மற்ற கேள்விகளுக்கு கொடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதில் மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.வழக்கு விசாரணை நடந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து தொழில் கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கோரினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.கே.மிஸ்ரா, மீண்டும் மறு நுழைவுத் தேர்வு நடத்துவதால் பலன் இருக்காது. எனவே மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த நான் உத்தரவிட மாட்டேன்.அதேபோல,பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துவதும் சரியானதாக இருக்காது. இது சரியான தீர்வாகாது என்றார் நீதிபதி.இந்த வழக்கில் தொடர்ந்து விவாதம் நடைபெறவுள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 22 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. இந் நிலையில் இக்கேள்விகளை ரத்து செய்து விட்டு, அவற்றிற்கான மதிப்பெண்களை மற்ற கேள்விகளுக்கு கொடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதில் மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை நடந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து தொழில் கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.கே.மிஸ்ரா, மீண்டும் மறு நுழைவுத் தேர்வு நடத்துவதால் பலன் இருக்காது. எனவே மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த நான் உத்தரவிட மாட்டேன்.

அதேபோல,பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துவதும் சரியானதாக இருக்காது. இது சரியான தீர்வாகாது என்றார் நீதிபதி.

இந்த வழக்கில் தொடர்ந்து விவாதம் நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X