கர்நாடகத்துடன் பேசிவிட்டு தீர்வு: பிரதமர்
டெல்லி:
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக, தமிழக அரசுகளுடன் பேசி, அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில், நியாயமான தீர்வு காணப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி, தன்னைச் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவினரிடம் பேசிய சிங்,
அனைத்துத் தரப்புக்கும் நியாயமான தீர்வு காண வேண்டியது மிக அவசியம். வறட்சி காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையால் ஒரு பகுதி (தமிழகம்) மட்டும் அதிகமாக பாதிக்கப்படக் கூடாது. பற்றாக்குறையையும் அதன் விளைவுகளையும் அனைத்துத் தரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட வேகமாகவே மழைக்காலம் தொடங்கிவிட்டது. வழக்கத்தைவிட நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு நம்மை மழைக் கடவுள் கைவிட மாட்டார் என்று நம்புகிறேன்.
காவிரி விவகாரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். கர்நாடக பிரதிநிதிகளுடனும் பேசிவிட்டு உரிய தீர்வைக் காண நிச்சயம் முயற்சி எடுப்பேன் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications