தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றியை எதிர்த்து வழக்குசென்னை: திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தனுஷ்கோடி ஆதித்தன் ஏப்ரல் 21-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது சொத்து விவரம், அவர் மீது கிரிமினல்வழக்குகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தெரிவிக்கும் 2 மனுக்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அதிகாரி அன்றைய தினமே இது குறித்து தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிந்த பிறகு, இரு மனுக்களையும் தனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மீண்டும் அதில் வேறு எந்த மனுவையும் செருகக் கூடாது. தேர்தல் அதிகாரி விதிமுறைப்படி செயல்பட்டிருந்தால், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தனுஷ்கோடி ஆதித்தனின்தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தனுஷ்கோடி ஆதித்தன் ஏப்ரல் 21-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது சொத்து விவரம், அவர் மீது கிரிமினல்வழக்குகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தெரிவிக்கும் 2 மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் அதிகாரி அன்றைய தினமே இது குறித்து தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிந்த பிறகு, இரு மனுக்களையும் தனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மீண்டும் அதில் வேறு எந்த மனுவையும் செருகக் கூடாது.
தேர்தல் அதிகாரி விதிமுறைப்படி செயல்பட்டிருந்தால், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும்.
எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தனுஷ்கோடி ஆதித்தனின்தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications