மருத்துவர்கள் அலட்சியம்!
மதுரை:
டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சரியாக கவனிக்காததால், மனம் வெறுத்த நோயாளி ஒருவர் மதுரை அரசுமருத்துவனையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடும் வயிற்று வலி காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு அவருக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது.
இதை அவரது உறவினர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
ஆனால், ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. மேலும், பணி நேரத்தில் இருக்க வேண்டிய மருத்துவரும்அப்போது இல்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் வலி அதிகமாகவே அங்குமிங்கும் உருண்டு, புரண்டுள்ளார் சப்பாணி. வலி மிகவும் அதிகமாகி, வேதனை கூடவே,மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே மரத்தில் தனது வேட்டியாலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில், இதே மதுரை மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கப்படாததால் மனம் உடைந்த ஒரு நோயாளி தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications