இந்தியா வந்தது ஒலிம்பிக் தீபம்டெல்லி:ஒலிம்பிக் தீபம் இன்று டெல்லி வந்தடைந்தது.கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பிய இந்த ஒலிம்பிக் தீபம், 6 வாரங்களில் 5கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களைக் கடக்கவுள்ளது.மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்துகொண்டிருக்கிறது.சீனாவில் இருந்து போயிங் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இந்த தீபம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சர்வதேசவிமான நிலையம் வந்தடைந்தது.தீபத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அப்போது இந்தியாவுக்கானகிரேக்க நாட்டுத் தூதர் எப்டாதியோஸ் லோஸோசும் உடனிருந்தார்.விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாகடெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு சுமார் 32 கி.மீ. தூரம் இந்தத் தீபம் எடுத்துச் செல்லப்படும்.இதனை ஏந்திக் கொண்டு கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக்,மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான்,ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரண்டுள்ளனர்.கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி சீனாவில் நடக்கவுள்ளது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக்ஸை நடத்த இந்தியாவும்விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி:
ஒலிம்பிக் தீபம் இன்று டெல்லி வந்தடைந்தது.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பிய இந்த ஒலிம்பிக் தீபம், 6 வாரங்களில் 5கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களைக் கடக்கவுள்ளது.
மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்துகொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து போயிங் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இந்த தீபம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சர்வதேசவிமான நிலையம் வந்தடைந்தது.
தீபத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அப்போது இந்தியாவுக்கானகிரேக்க நாட்டுத் தூதர் எப்டாதியோஸ் லோஸோசும் உடனிருந்தார்.
விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாகடெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு சுமார் 32 கி.மீ. தூரம் இந்தத் தீபம் எடுத்துச் செல்லப்படும்.
இதனை ஏந்திக் கொண்டு கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக்,மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான்,ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரண்டுள்ளனர்.
கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி சீனாவில் நடக்கவுள்ளது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக்ஸை நடத்த இந்தியாவும்விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications