மாநிலங்களவை தேர்தல் மீதான தடை நீங்கியதுடெல்லி:தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 65 மாநிலங்களவை எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக நடக்க இருக்கும் தேர்தலுக்குவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து இன்று மனு தாக்கல் தொடங்குகிறது.குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர், அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட முடியும்என்றிருந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தி, யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும்ராஜ்யசபா எம்.பியாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் குல்தீப் நய்யார், முன்னாள் எம்.பி. இந்த்ரஜித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21ம் தேதி நடக்கயிருந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிய பிறகு நீதிமன்றம் அதில் தலையிடுவது அரசியல் சட்டத்தின் 329 (பி)-வது பிரிவுக்கு எதிரானது,எனவே தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத்தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது.நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில்,குல்தீப் நய்யார், இந்த்ரஜித் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.இப்போதைய தேர்தல் மூலம் நடக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்வு செல்லுமா என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளனர்.இதையடுத்து இன்று ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. போட்டிஇருந்தால் 28ம் தேதி தேர்தல் நடக்கும்.தமிழகத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்து, அதிமுக சார்பில் 4 எம்.பிக்களும், திமுக கூட்டணி சார்பில் இருஎம்.பிக்களும் (அதில் ஒன்று பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) தேர்வு செய்யபடவுள்ளனர். தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பியாக,34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 65 மாநிலங்களவை எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக நடக்க இருக்கும் தேர்தலுக்குவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து இன்று மனு தாக்கல் தொடங்குகிறது.

குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர், அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட முடியும்என்றிருந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தி, யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும்ராஜ்யசபா எம்.பியாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் குல்தீப் நய்யார், முன்னாள் எம்.பி. இந்த்ரஜித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21ம் தேதி நடக்கயிருந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிய பிறகு நீதிமன்றம் அதில் தலையிடுவது அரசியல் சட்டத்தின் 329 (பி)-வது பிரிவுக்கு எதிரானது,எனவே தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத்தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில்,குல்தீப் நய்யார், இந்த்ரஜித் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்போதைய தேர்தல் மூலம் நடக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்வு செல்லுமா என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து இன்று ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. போட்டிஇருந்தால் 28ம் தேதி தேர்தல் நடக்கும்.

தமிழகத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்து, அதிமுக சார்பில் 4 எம்.பிக்களும், திமுக கூட்டணி சார்பில் இருஎம்.பிக்களும் (அதில் ஒன்று பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) தேர்வு செய்யபடவுள்ளனர். தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பியாக,34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+