தமிழக, கர்நாடக விவசாயிகள் சந்திப்பு
திருச்சி:
தமிழக, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் இன்று திருச்சியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்தும், வறட்சிக் காலத்தில் தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்தும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் விவாதித்து வருகிறது.
காவிரிக் குடும்ப விவாதம் என்ற பெயரில் பெங்களூரில் இந்த விவாதம் ஏற்கனவே நடந்துள்ளது.
இந் நிலையில் இன்று திருச்சியில் இரு மாநில விவசாயிகளும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட காவிரிக் குடும்ப கூட்டம் நடந்தது. இதில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் தொட்டராஜு தலைமையில் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
நாளை காலை திருச்சி அருகே உள்ள மேலணையில் தொடங்கி மேட்டூர் அணை வரை காவிரிப் பாசனப் பகுதிகளை இரு மாநில விவசாயிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications