ஒரு வாரத்தில் சென்னையில் வீராணம் நீர் விநியோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகர மக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் வீராணம் குடிநீர் விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது.

புது வீராணம் திட்டம் என்ற பெயரில் வீராணம் ஏரியிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சென்னை மாநகர குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வீராணம் ஏரியில் தற்போது தண்ணீர் இல்லாததால், நெய்வேலி அருகே போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் சென்னை போரூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

கடந்த மே 31ம் தேதி முதல் போரூர் ஏரிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் வரத் தொடங்கியது. ஆனால் இடையில் குழாயில் கசிவு ஏற்பட்டதால் ஜூன் 3ம் தேதி குழாய்கள் மூலம் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டு, கசிவு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 9ம் தேதி முதல் மீண்டும் போரூர் ஏரிக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் போரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தத் தண்ணீர் ஆழ்குழாய்கள் மூலம் நீரேற்று நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேரும். அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் குடிநீர் விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+