For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகை, திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை:

காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கூட்டி காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடநடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் காவிரியில் தண்ணீர் விடக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் கண்டனப்போராட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கூட்ட வேண்டும்.

காவிரி ஆணையத்தைக் கூட்டுவதன் மூலம்தான் கர்நாடகத்தை காவிரி நீரை திறந்து விடுமாறு வலியுறுத்த முடியும்.

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் தேவையை புரிந்து பிரதமர் இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளக் கோருகிறோம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X