கருணாநிதியே பதில் சொல்: திடீர் போஸ்டர்கள்
கரூர்:
காவிரியில் தண்ணீர் கிடைக்கச் செய்யாவிட்டால் திமுக, பா.ம.க, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 12 மத்தியஅமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கோரி கரூர் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திடீரென முளைத்துள்ள இந்த போஸ்டர்களில் சிவப்புநிறத்திலான எழுத்துக்களில், திமுகவை கடுமையாகத் தாக்கி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மூன்று வகையான அந்த போஸ்டர்களின் விவரம:
போஸ்டர்- 1: இலாகா கேட்டு 72 மணி நேர போராட்டம் நடத்திய கருணாநிதியே!
காவிரி தண்ணீர் கேட்டு மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று சொல்லத் தயாரா?
போஸ்டர்- 2: இலாகா கேட்டு நிர்பந்த்தம். கப்பல் வேண்டுமாம், உள்துறை வேண்டுமாம், நெடுஞ்சாலைத்துறைவேண்டுமாம்..
காவிரி பிரச்சனையைத் தீர்க்க நீர்வளத்துறை மட்டும் வேண்டாம்.. ஏன் வேண்டாமாம்? கருணாநிதியே பதில் சொல்.
போஸ்டர் 3: காவிரியில் நீர் பெற முடியாவிட்டால் விலகு - விலகு
12 மத்திய அமைச்சர்களும் பதவி விலகு!
இந்த போஸ்டர்களால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.