செப்டம்பரில் இந்தியா- பாக் ஹாக்கிப் போட்டி
டெல்லி:
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஹாக்கி போட்டிகள் தொடங்க உள்ளன.
முதலில் இந்தியா அணி பாகிஸ்தான் சென்று 4 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி இந்தியா வந்து 4 ஆட்டங்களில் விளையாடுகிறது.
முதல் ஆட்டம் கராச்சியில் செப்டம்பர் 27-ல் தொடங்குகிறது. அதையடுத்து குவெட்டா (செப். 27), பெஷாவர் (செப். 29), லாகூர் (அக். 1) ஆகிய இடங்களில் இந்திய அணி விளையாடுகிறது.
இதனையடுத்து இந்தியா வரும் பாகிஸ்தான் அணி டெல்லியில் அக்டோபர் 4ம் தேதியும், சண்டீகரில் அக்டோபர் 6ம் தேதியும், ஹைதராபாதில் அக்டோபர் 8ம் தேதியும், பெங்களூரில் அக்டோபர் 10ம் தேதியும் விளையாடுகிறது.
இந்த இரு நாடுகளுக்கு இடையே 1999-ம் ஆண்டில் இந்தியாவில் 4 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 5 ஆட்டங்களும் கொண்ட ஹாக்கித் தொடர் நடைபெற்றது. அதனையடுத்து நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவு சிக்கலானதால், விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.