1 முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லோரும் பாஸ்
சென்னை:
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லா மாணவ, மாணவிகளையும் பாஸ் செய்து விடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இளம் மாணவ, மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் கல்வி வழங்குவதில் தீவிரமாக உள்ளது எனது அரசு. இளம் குழந்தைகளின் மனதில் தேர்வு என்ற அச்சம் நீங்கி கல்வி கற்றலின் இனிமையை உணரச் செய்ய முடிவு செய்திருக்கிறோம்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் படிப்பிலிருந்து பாதியில் நின்றுவிடுவதைத் தவிர்த்தால் தான் அனைவருக்கும் உயர் கல்வி என்ற நோக்கம் நிறைவேறும்.
இதையடுத்து இந்த இளம் மாணவ, மாணவிகளை தேக்கமின்றி, அதாவது பெயில் ஆக்காமல், தேர்ச்சி அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
குறைந்தபட்சம் 75 சதவீத வருகை இருந்தால் மாணவ, மாணவிகளை பாஸ் செய்யப்படுவர். இந்தத் திட்டம் இக் கல்வியாண்டு முதலே அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சமீபத்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின் இன்று முதல் முதலாக தமிழக அமைச்சரவைக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications