நடுக்கடலில் 27 இலங்கைத் தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 27 பேரை இந்தியக் கடற்படை கைது செய்தது.

இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து குழுவினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை நோக்கி சென்ற ஒரு படகை தடுத்தனர். இதையடுத்து படகில் இருந்து 6 பேர் கடலில் குதித்து நீந்தித் தப்பிவிட்டனர்.

மற்றவர்களை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்பதும், மதுரை, சேலம் அகதிகள் முகாம்களில் இருந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 7 பேர் பெண்கள், 7 குழந்தைகள் அடங்குவர். கடலில் குதித்துத் தப்பியவர்களில் 4 பேர் ஏஜென்டுகளாவர்.

இலங்கைக்குத் திரும்ப இந்த 27 பேரிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் அகதி முகாமிலேயே ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+