For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுக்கடலில் 27 இலங்கைத் தமிழர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 27 பேரை இந்தியக் கடற்படை கைது செய்தது.

இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து குழுவினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை நோக்கி சென்ற ஒரு படகை தடுத்தனர். இதையடுத்து படகில் இருந்து 6 பேர் கடலில் குதித்து நீந்தித் தப்பிவிட்டனர்.

மற்றவர்களை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்பதும், மதுரை, சேலம் அகதிகள் முகாம்களில் இருந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 7 பேர் பெண்கள், 7 குழந்தைகள் அடங்குவர். கடலில் குதித்துத் தப்பியவர்களில் 4 பேர் ஏஜென்டுகளாவர்.

இலங்கைக்குத் திரும்ப இந்த 27 பேரிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் அகதி முகாமிலேயே ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X