டி.எஸ்.பி. தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணைக் காவல் கண்காணிப்பாளர்களைத் நேரடியாகத் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வில்வநகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந் நிலையில் டி.எஸ்.பி. பதவிக்கான நேர்முகத் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுத்த பிறகே மற்ற இடங்களை நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், டி.எஸ்.பி. பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில் தனது தீர்ப்பில் சிறு மாற்றம் செய்தார் நீதிபதி.
அதன்படி ஒரு (தாழ்த்தப்பட்ட பிரிவில்) பதவியிடத்தை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு மற்ற இடங்களை அரசு நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications