தெலுங்கு தேசத்தில் பிளவு: நாயுடு அதிர்ச்சிஹைதராபாத்:மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த தெலுங்கு தேசத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.முன்னாள் முதல்வரும் அக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை எதிர்த்து முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.ஹை-டெக் முதல்வர் என்று பெயரை உருவாக்கிக் கொண்ட நாயுடுவுக்கு கடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கிடைத்து. தோல்விக்கு பா.ஜ.கவை அவர் குற்றம் சாட்டினார்.இந் நிலையில் இரு முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.மாநிலத்தின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களும் விரைவில் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரீய சமிதியில் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.அதே போல தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், ரங்கரெட்டி, வாரங்கள், அடிலாபாத் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு ராட்ரீய சமிதியில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.தெலுங்கான தனி மாநிலம் கோரி வரும் ராஷ்ட்ரீய சமிதிக்கு கடந்த தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்தது. இந்த தனி மாநிலக் கோரிக்கையை சந்திரபாபு நாயுடு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்:
மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த தெலுங்கு தேசத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் அக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை எதிர்த்து முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.
ஹை-டெக் முதல்வர் என்று பெயரை உருவாக்கிக் கொண்ட நாயுடுவுக்கு கடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கிடைத்து. தோல்விக்கு பா.ஜ.கவை அவர் குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் இரு முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.
மாநிலத்தின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களும் விரைவில் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரீய சமிதியில் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.
அதே போல தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், ரங்கரெட்டி, வாரங்கள், அடிலாபாத் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு ராட்ரீய சமிதியில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்கான தனி மாநிலம் கோரி வரும் ராஷ்ட்ரீய சமிதிக்கு கடந்த தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்தது. இந்த தனி மாநிலக் கோரிக்கையை சந்திரபாபு நாயுடு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications