உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி: மணிசங்கர்
சென்னை:
உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி வழங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
தென்மாநில பெண் உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என்பது பெரும்பாலானோர் எழுப்பும் கோரிக்கை. டெல்லியில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்ல வேண்டிய மத்திய அரசு நிதி, சென்னை வழியாகத் தான் போக வேண்டும் என்பதில்லை. டெல்லியில் இருந்து நேரடியாகவே மயிலாடுதுறைக்குச் அனுப்பலாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது வங்கிகள் உள்ளன. ஏ.டி.எம். வசதி இருந்தால் டெல்லியிலிருந்து ஒரே நொடியில் கிராமத்துக்குப் பணத்தை அனுப்பி விடலாம். ஆனால், இவ்—வாறு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை..
அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இம் மாதம் 28, 29 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications