முதல்வரை உளவு பார்க்கும் புதுவை ஆளுநர் !

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவை முதல்வர் ரங்கசாமியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆளுநர் என்.என்.ஜா உளவு பார்ப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

புதுவை முதல்வர் ஜா குறித்து காங்கிரஸார் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலின்போது, புதுவை பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட லலிதா குமாரமங்கலத்தை தேர்தல் அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைத்ததால் ஜா பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

இதையடுத்து தற்போது புதுவை முதல்வர் ரங்கசாமியை உளவு பார்ப்பதாக ஆளுநர் மீது காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக திருநள்ளாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுவை ஆளுநரின் நடவடிக்கைகள் படு மோசமாக உள்ளது.

முதல்வர் ரங்கசாமியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உளவு பார்க்க அவர் ஆணையிட்டுள்ளார்.

டெல்லியில் வரும் நாளிதழை விமானம் மூலம் தினசரி புதுவைக்கு வரவழைத்துப் படிக்கிறார் ஆளுநர். அந்த நாளிதழின் விலை ரூ. 5 மட்டுமே, ஆனால் விமானத்தில் வரவழைத்துப் படிப்பதற்கான செலவு ரூ. 236 ஆகும்.

புதுவை ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இங்குள்ள அரசு நிர்வாகத்தில் அவர் குழப்பம் விளைக்க முயற்சிக்கலாம் என்றார் அவர். புதுவை ஆளுநர் ஜா, பாஜக ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+