மன்மோகன், சோனியாவுக்கு வாசன் நன்றி
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட நடிவடிக்கை எடுத்த மன்மோகன் சிங், சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் தரம்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப் பிரச்சினைகளில் கட்சியின் நலனை விட பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குரல் கொடுப்பதால் மட்டுமே நிரந்தத் தீர்வு காண இயலும். இதற்கான ஆரோக்கியமான அரசியல் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
காவிரி நீர் தமிழகத்துக்கு வருகை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
மார்க்சிஸ்ட் வரவேற்பு:
கபினி அணையைத் திறந்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வரவேற்றுள்ளார்.
பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கர்நாடக அரசு கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications